ஆம்பூர் தாலுகா வடபுதுப்பட்டு கிராமத்தில் ஓணி தெரு பகுதியில் 3-வது தெருவில் மக்கள் செல்லக்கூடிய சாலையில் ஒரு வீட்டுக்கு எதிரே சாலையை உயர்த்தி அமைத்துள்ளனர். அந்த வழியாக செல்வோருக்கும், திருவிழா நாட்களில் சாமி வீதி உலா வருவதற்கும் இடையூறாக இருக்கிறது. சாலையில் மழைநீர் வெளியேற தடையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர்த்தி அமைத்துள்ள தெரு சாலையை அகற்ற வேண்டும்.
-விஜயரங்கன், ஆம்பூர்.