கே.வி.குப்பம் பஸ்நிலையம் பின்பக்கம் காட்பாடி-ஜோலார்பேட்டை இடையே செல்லும் ரெயில்பாதை உள்ளது. அதன்கீழே சுரங்கப்பாதை உள்ளது. அந்த வழியாக சீதாராம்பேட்டை, காமாட்சி அம்மன் பேட்டை, கவசம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு விவசாயிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். அந்தச் சுரங்கப்பாதையில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்துப் பாதிக்கப்படுகிறது, மக்கள் அவதிப்படுகின்றனர். ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் அதிகாரி சீரமைக்க வேண்டும்.
-சாமிதுரை, கே.வி.குப்பம்.