சாலையோரம் பிணங்களை புதைக்கும் அவலம்

Update: 2023-03-01 16:52 GMT

வாலாஜாபேட்டை கருக்கல் மலை பக்கத்தில் உள்ள சுடுகாட்டு வழியாகத்தான் பஸ்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், செல்ல வேண்டும். அகலமாக இருந்த சாலை தற்போது ஆக்கிரமிப்பால் குறுகி விட்டது. அந்தச் சாலையில் ஒரு பஸ் மட்டும் போகும் அளவு உள்ளது. சாலையில் இருபுறமும் பிணங்கள் புதைக்கப்படுகின்றன. அதில் சமாதிகளும் எழுப்பப்படுகின்றன. இதனால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. வாலாஜா நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க வேண்டும். இறந்தவர்கள் உடல்களை புதைக்கும் இடம் குறித்து சரியான வேலி அமைக்க வேண்டும்.

-சண்முகம், வாலாஜா. 

மேலும் செய்திகள்