மண்டைக்காடு அருகே காளிவிளை உள்ளது. இந்த பகுதியில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சஜின் சந்தோஷ், காளிவிளை.