சாலையோர முட்புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2024-01-07 16:40 GMT

செங்கம் அருகே ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக செங்கம் பணிமனை வளாகம் அருகருகே உள்ளன. இங்கு சில வருடங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது சாலை இரு பக்கமும் முள்மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. நீதிபதிகள் கோர்ட்டுக்கு செல்லவும், போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து பஸ்களும் இந்தச் சாலையை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். எனவே முள் மரங்கள், செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், செங்கம்.

மேலும் செய்திகள்