பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணி

Update: 2022-08-12 12:07 GMT

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் அருகில் உள்ள ரெயில்வே பாலத்தின் வழியாக எளிதில் திருவண்ணாமலை புறவழி சாலைக்கு செல்லும் வழியில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வேளாண்மை அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. இந்தப் பாதையில் ஒரு பகுதியில் தார் சாலையும், மறுபகுதியில் சாலை அமைக்கப்படாமலும் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் சென்றுவர இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலையை முழுமையாக அமைத்துத் தர வேண்டும்.

-மணி, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்