சாலையை சீர் செய்ய வேண்டும்

Update: 2022-09-05 11:17 GMT

கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சியில் உள்ள அனைத்துக் கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகள், பொதுமக்கள் பேராம்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருத்துவம் பார்க்க வேண்டும். அதற்காக மட்றப்பள்ளியில் இருந்து விசமங்கலம் செல்லும் சாலையில் தான் போக வேண்டும். அந்தச் சாலை 7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை ஆகும். தற்போது அந்தச் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும்.

-எஸ்.காளிதாசன், மட்றப்பள்ளி. 

மேலும் செய்திகள்