சாலை நீண்டு வளர்ந்துள்ள முட்புதர்களால் இடையூறு

Update: 2022-08-28 10:31 GMT

படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட காளிகாபுரத்தில் இருந்து அரசமரம் கிராமம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் முட்புதர்கள் வளா்ந்து சாலை வரை நீண்டுள்ளது. இதனால் பள்ளி வேன்கள், பள்ளி ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. சாலை வரை நீண்டு வளர்ந்து, இடையூறாக உள்ள முட்புதர்களை அகற்ற படவேடு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திகேயன், படவேடு.

மேலும் செய்திகள்