வேகத்தடையின் உயரத்தை உயர்த்த வேண்டும்

Update: 2024-04-28 17:09 GMT

வேலூர் பஸ் நிலையம் அருகில் செல்லியம்மன் கோவில் எதிரே வேகத்தடை உள்ளது. அந்த வேகத்தடையை சற்று உயர்த்த வேண்டும். வாகனங்கள் வேகமாக வரும்போது, பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும்போதும், உள்ளே செல்லும்போதும் சாலையை கடக்கும் நேரத்தில் விபத்துகள் நடக்கின்றன. வேகத்தடையை சற்று உயத்தினால் நன்றாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-காசிவிஸ்வநாதன், வேலூர்.

மேலும் செய்திகள்