கண்ணமங்கலம் பேருராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் அம்ருதா திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. அதற்காக தெருக்களின் நடுவே பள்ளங்கள் தோண்டி இன்னும் சரியாக மூடவில்லை. இதனால் தெருக்களில் நடந்தும், வாகனங்களிலும் செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். குடிநீர் திட்டப்பணிக்காக தோண்டிய பள்ளத்தை முறையாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், கண்ணமங்கலம்.