கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உத்தனப்பள்ளி செல்லும் சாலை உள்ளது. நீண்ட காலமாக சேதமடைந்து இருந்த நிலையில் தற்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் டிப்பர் லாரிகளில் இருந்து ஜல்லிகற்கள் கீழே கொட்டி செல்வதால் மீண்டும் சாலை சேதமடைய வாய்ப்பு உள்ளது. அதேபோல சாலையில் பல இடங்களில் எம்.சாண்ட் மணல் கொட்டப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே சூளகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் ஜல்லிகற்கள், எம்.சாண்ட் போன்றவற்றை டிப்பர் லாரிகள் கொட்டியபடி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல பஸ் நிலையம் அருகில் உத்தனப்பள்ளி பிரிவு சாலையில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.