ஈரோடு ஆண்டவர் வீதியில் உள்ள சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல சிரமமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.