கந்திலி அருகே காக்கங்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தோரணம்பதி செல்லும் சாலையில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. அந்த வளைவுகளில் மரங்கள் அடர்ந்துள்ளதால், வாகனங்கள் வருவது சரியாக தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே ஆபத்தான சாலை வளைவுகளில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மூர்த்தி, செவ்வாத்தூர்.