வேலூரை அடுத்த பெருமுகையில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி உள்ளது. பள்ளி அருகில் செல்லும் கால்வாய் மீதான சிறு பாலத்தில் இருபக்கமும் இரும்புத்தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது. அது, அனைத்தும் சேதம் அடைந்த நிலையில், பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாலத்தில் நடந்து, வாகனங்களில் செல்வோர் தவறி கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக பாலத்தை கடந்து செல்ல ஏதுவாக, பாலத்தின் இரு ஓரங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்க அதிகரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-சங்கரநாராயணன், பெருமுகை.