விழுப்புரம் 31-வது வார்டு சீனுவாச நகர், இளங்கோ நகர் மற்றும் சாலமேடு ஆகிய பகுதிகளில் போடப்பட்டுள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையில் உள்ள பள்ளத்தில் வாகன ஓட்டிகள் இடறி விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் அடிக்கடி வாகனங்களும் பழுதடைந்து வருகிறது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.