சுடுகாட்டுக்கு பாதை வசதி தேவை

Update: 2023-07-23 12:23 GMT

கே.வி.குப்பம் தாலுகா காளாம்பட்டு அடுத்த கெங்கசாணிகுப்பம் கிராமத்தில் வசித்து வரும் பொது மக்களுக்கு தனியாக சுடுகாடு உள்ளது. ஆனால் சுடுகாட்டுக்கு செல்ல போதிய பாதை வசதி இல்லை. தனியார் விவசாய நிலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். தனியாரின் விவசாய நிலத்தைப் பொது வழியாகப் பயன்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. சுடுகாட்டுப் பாதைக்காக இடம் விட சிலர் விருப்பம் தெரிவிக்கின்றனர். அரசு தரப்பில், அவர்களிடம் பேசி சுடுகாட்டுக்கெனப் பொதுப்பாதையைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

-வேல்முருகன், காளாம்பட்டு.

மேலும் செய்திகள்