முட்புதர்களால் விபத்து அபாயம்

Update: 2026-06-28 13:41 GMT

பந்தலூர் அருகே கோட்டப்பாடி முதல் மழவன் சேரம்பாடி வரை சாலையோரத்தில் இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவற்றின் கிளைகள் சாலை வரை நீண்டு காணப்படுகின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்களை கூட பார்க்க முடிவது இல்லை. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரம் நின்றால் கூட தெரியாது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே அந்த முட்புதர்களை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்