காங்கயத்தில் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளாமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் வீரணம்பாளையம் அருகே தார்சாலை சேதமடைந்து உள்ளது. மேலும் அந்த சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிட்டு ஒதுங்கும்போது நிலை தடுமாறி பள்ளத்துக்குள் விழும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அப்பகுதியை கடக்கின்றனர். இரவு நேரத்தில் அந்த வழியாக வரும்போது மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.