சாலையில் சிதறிக்கிடக்கும் ஜல்லிக்கற்கள்

Update: 2026-08-16 17:43 GMT

மூலனூர் பகுதியில் உள்ள கரூர் மெயின் சாைல பிரதான சாலையாகும். இப்பகுதியில் வாகனப்போக்குவரத்து அடிக்கடி இருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் அந்த சாலையில் ஜல்லிக்கற்கள் மற்றும் சிறிய கற்கள் சிதறிக்கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் சிதறிக் கிடக்கும் கற்களால் நிலைதடுமாறி கீழே விழும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகிறது. மேலும் சாலையில் உண்டாகும் தூசியால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையில் சிதறிக் கிடக்கும் கற்களை அகற்றி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்