மரப்பாலம் முதல் இந்திராகாந்தி சதுக்கம் வரை உள்ள 100 அடி சாலையில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் அந்த சாலை இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது. மின்விளக்குகள் ஒளிர மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.