திண்டுக்கல் பேகம்பூரில் இருந்து குடைபாறைப்பட்டி வரையிலான வத்தலக்குண்டு சாலையில் வளைவுகள், சாலை சந்திப்புகள் அடுத்தடுத்து உள்ளன. ஆனால் அந்த சாலையில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகின்றன. எனவே அந்த சாலையில் போதுமான வேகத்தடைகள், மின்விளக்குகள் மற்றும் விபத்து அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.