கோவை மாநகரில் பல இடங்களில் குடிநீர் குழாய் பதிக்க சாலைகளில் குழி தோண்டி உள்ளனர். ஆனால் குழாய் பதித்து முடித்த பிறகு அந்த குழிகளை மூடிவிட்டு செல்கிறார்களே தவிர சாலைகளை விரைவாக சீரமைப்பது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.