கரூர் மாவட்டம் எல்.ஜி.பி. நகரில் பாதாள சாக்கடை சீரமைப்புப் பணிக்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாததால் அப்பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருவதுடன், கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஆபத்தை விளைவிக்கும் அந்த பள்ளத்தை உடனடியாக மூடி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.