ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் இருமேனி கிராம பகுதியில் நீண்ட நாட்களாகவே சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள், அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் மழை பெய்யும் நேரங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சகதியாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்க முன்வருவார்களா?