சோளிங்கரை அடுத்த ஒரு தனியார் மருத்துவமனை அருகே கே.வி.டி. நகர் பகுதியில் நான்கு வழிச்சாலையில் வளைவுப் பகுதியில் சாலை ஓரமாக மலைப்பகுதி இருக்கிறது. அந்த மலையால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலை ஓரம் இருக்கும் மலையை சுமார் 10 அடி நீளத்துக்கு அகற்றி வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியும் வகையில் சாலையை அதிகாரிகள் விரிவுபடுத்த வேண்டும். அந்தப் பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.
-பாலாஜி, சோளிங்கர்.