தினத்தந்திக்கு நன்றி

Update: 2023-03-15 11:42 GMT

வேலூர் சலவன்பேட்டை அம்மணாங்குட்டை ரோட்டில் குடிநீர் குழாய் பழுதை சரிசெய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் இந்தவழியாக செல்லும் சிறுவர்கள், முதியவர்கள் பள்ளத்தில் தவறிவிழும் நிலை உள்ளது. உடனடியாக பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் படத்துடந் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து உடனடியாக பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.


மேலும் செய்திகள்