சாலையில் தேங்கும் மழைநீரால் அவதி

Update: 2024-08-11 17:27 GMT

அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சி பீம்ராவ் தெருவில் சாலை வசதி சரியில்லை. மழைப் பெய்தால் மழைநீர் சாலையிலேயே குளம்போல் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக சிறுவர், சிறுமிகள் பள்ளிக்கு செல்கிறார்கள். தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. பூச்சிகளும் வீடுகளுக்குள் வருகின்றன. எனவே எங்கள் பகுதியில் சாலை வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜய், பொய்கை. 

மேலும் செய்திகள்