தெருக்களை சீரமைக்க வேண்டும்

Update: 2023-12-03 16:48 GMT

கண்ணமங்கலம் அருகில் உள்ள அனந்தபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பள்ளக்கொல்லை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தக் கிராம தெருக்களில் மழைப் பெய்யும்போது மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இரவில் கொசு தொல்லை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் தெருக்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்களை சீரமைக்க வேண்டும்.

-பழனிசாமி, கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்