வேகத்தடைகளில் வெள்ளைநிற பெயிண்ட் அடிக்க வேண்டும்

Update: 2023-08-30 17:38 GMT

அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம், திருத்தணி, சோளிங்கர் மற்றும் திருவள்ளூர் செல்லும் நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் உள்ளன. அதில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்காமல் உள்ளதாலும், இரவில் ஒளிரும் பிரதிபளிப்பான்கள் பதிக்காமல் இருப்பதாலும் தினமும் வேகத்தடைகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க வேண்டும், இரவில் ஒளிரும் பிரதிபளிப்பான்கள் பொருத்த வேண்டும்.

-லோகேஷ், அரக்கோணம்.

மேலும் செய்திகள்