சாலையோர மண் குவியலால் ஆபத்து

Update: 2024-02-18 17:06 GMT

வெம்பாக்கம் தாலுகா மாங்கால் கூட்டுச்சாலையில் இருந்து மாமண்டூர், தூசி, அப்துல்லாபுரம் கூட்டுச்சாலை வரை மெயின் ரோட்டின் ஓரமாக மண், எம்.சாண்ட் மணல் குவியல் உள்ளது. கனரக வாகனங்கள் மாறி செல்லும்போது இருசக்கர வாகனம், சைக்கிள்களில் ஒதுங்கும்போது, மண் மற்றும் எம்.சாண்ட் மண் குவியலில் சிக்கி சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மண்ணில் சிக்கி சறுக்கி விழுந்து விபத்து ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர மண், மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

-அப்துல், தூசி. 

மேலும் செய்திகள்