பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவாணம், கந்தனேரி பகுதிகளில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.90 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு மழைநீர் வடிகால் மற்றும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி கடந்த 5 மாதங்களாக நடந்தது. மழைநீர் வடிகால் அமைத்து அதன் பக்கவாட்டில் மண்கொண்டு நிரப்பப்பட்டது.
மேலும் பிராமணமங்கலம் வெட்டுவாணம், அணைக்கட்டு, கந்தனேரி உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் அதிக அளவில் சேதமாகி, ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளை விரைந்து சீரமைத்துத் தர வேண்டும்.
-தினகர், பள்ளிகொண்டா.