கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-09-24 12:04 GMT

போளூர் தாலுகா சதுப்பேரி கிராமத்தில் தனியார் நிலம் வழியாக இருந்த சாலையில் மீண்டும் புதிய சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்களை கொட்டி பணியை தொடங்கியது. அந்தப் பணியை மீண்டும் தொடங்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்படுகின்றனர். சாலை பணியை விரைவில் தொடங்கி முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ம.மூர்த்தி, சதுப்பேரி.

மேலும் செய்திகள்