கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-08-02 13:15 GMT

நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டையை நோக்கி செல்லும் சாலையில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியது. அந்தச் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல நாட்களாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். சாலை பணியை விரைந்து தொடங்கி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்