ஆமை வேகத்தில் சாலை பணி

Update: 2022-11-13 12:36 GMT

ஆற்காடு அண்ணாசிலையில் இருந்து உழவர் சந்தை வரை நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்த பள்ளம் தோண்டினார்கள். அதில் ஒரு பக்கம் சாலை பணி முடிந்து விட்டது. மற்றொரு பக்கத்தில் தோண்டிய பள்ளத்தில் ஜல்லிக்கற்கள் போட்டுள்ளனர். அதில் இன்னும் தார் ஊற்றவில்லை. அந்தப் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதுநாள் வரை பணி முழுமை பெறாமல் உள்ளது. அந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-கோ.கீ.வாசன், ஆற்காடு. 

மேலும் செய்திகள்