திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் பிரதான சாலைகளான ஆர்.சி.எஸ்.மெயின்ரோடு, சாமூண்டீஸ்வரி அம்மன், முருகன் கோவில்களுக்கு செல்லும் சாலை, தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சந்தை வழி சாலை ஆகிய அனைத்தும் தோண்டப்பட்டு மீண்டும் சரியாக மூடாமல் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிதாக தார் சாலை போட வேண்டும்.
-ராஜா, நாட்டறம்பள்ளி