சோளிங்கரை அடுத்த கூடலூரில் இருந்து வையலாம்பாடி வழியாக கோவிந்ததாங்கல் கூட்டுச்சாலை வரை தார் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இந்த வழியாகத்தான் தினமும பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்த வழியாக தான் விவசாயிகள், பொதுமக்கள் சோளிங்கர் அல்லது அரக்கோணம் செல்ல வேண்டும். சேதம் அடைந்த சாலையை தார் சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கபீர்தாஸ், சோளிங்கர்.