ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி பசுமை நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் சாலை மிக மோசமாகவும், கரடுமுரடாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். விபத்துகளும் நடக்கின்றன. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும்.
-சுரேஷ், பாச்சல்.