திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு-திருவண்ணாமலை சாலையின் இரு பக்கமும் நெடுஞ்சாலைத்துறை மூலம் பெயர் பலகை, எச்சரிக்கை தகவல் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. தச்சம்பட்டு அருகில் உள்ள கண்ணமடை காப்புக்காடு அருகே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை சாய்ந்து சேதமாகி உள்ளது. கீழே சாய்ந்து கிடக்கும் பலகையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பாரதிகுமார், தச்சம்பட்டு.