திமிரி பேரூராட்சியில் பஸ் நிலையம் புதிதாக கட்டி 2024-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. பஸ் நிலையத்தில் வெளிப்புறமும், உள்புறமும் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர். அதேபோல் உள்புறத்தில் செடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை சீர் செய்ய வேண்டும்.
-குணாளன், திமிரி.