சாலை வசதி செய்து தர வேண்டும்

Update: 2023-10-08 16:50 GMT

கண்ணமங்கலம் அருகில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் தேன்மலைப்பட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வயல் வெளிகளில் வீடு கட்டி வசிக்கின்றனர். இவர்கள் இங்கிருந்து பிரதான சாலைக்கு செல்லவோ, வயல்களுக்கு உர மூட்டைகள், வயலில் விளைந்த விளை பொருட்களை கொண்டு செல்ல போதிய சாலைவசதி இல்லை. சாலை வசதி கோரி அய்யம்பாளையம் கிராம சபா கூட்டத்தில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த பகுதியில் சாலை வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குணாளன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்