கனரக வாகனங்களால் சாலை பழுது

Update: 2023-04-12 11:21 GMT

ஆற்காடு நகராட்சி 19-வது வார்டு மனை பிரிவு நுழைவு வாயிலில் நாள் ஒன்றுக்கு 150 கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் புழுதி, தூசு பறக்கிறது. அந்தத் தூசு, புழுதி அருகில் உள்ள வீடுகளிலும் வந்து படர்கிறது. கனரக வாகனங்களால் சாலை பழுது ஏற்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினரும், நெடுஞ்சாலைத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.டி.குணா, ஆற்காடு. 

மேலும் செய்திகள்