மண்ணை அகற்ற வேண்டும்

Update: 2023-05-28 13:33 GMT

செய்யாறு-காஞ்சீபுரம் சாலையில் கிளியத்தூர் கிராம பகுதியில் சாலை ஓரம் இணையதள கேபிள் புதைக்கும் பணி நடந்தது. அதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. பணி முடிந்ததும் மண்ணை முழுமையாக அகற்றாமல் விட்டுள்ளனர். அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலையோரம் இரவில் ஒளிரும் எச்சரிக்கை ஒளிப்பான்களை மண்ணை கொட்டி மூடி விட்டதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையோரம் சிதறி கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகுந்தன், செய்யாறு.

மேலும் செய்திகள்