சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கும் அவலம்

Update: 2022-11-30 10:57 GMT

ஜோலார்பேட்டை அருகே பக்கிரிதக்கா பகுதியில் கட்டேரி பகுதிக்கு செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கும் மழைநீரை வடிய வைப்பார்களா?

-பி.மணிகண்டன், சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்