வேலூர் பலவன்சாத்து சுப்பிரமணிய ஆசிரியர் தெருவில் பாதாள சாக்கடை பணிகள் நடந்தது. ஆனால் அந்த இடத்தில் மண் சரிந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாகவே குடிநீர் வீணாக வெளியேறுவதால் அவ்வழியாக வாகனங்களில் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கவேல், பலவன்சாத்து.