மேம்பால சுவரில் வளர்ந்த செடிகள்

Update: 2024-04-21 16:31 GMT

காவேரிப்பாக்கத்தை அடுத்த துரைப்பெரும்பாக்கம் கூட்ரோடு பகுதியில் மேம்பாலப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் பணிகள் முடியும் முன்பே மேம்பால சுவரில், ஒருசில இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், சுவரில் விரிசல் ஏற்படும் நிலை உள்ளது. செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வன், துரைப்பெரும்பாக்கம்.

மேலும் செய்திகள்