ஆமை வேகத்தில் நடக்கும் மேம்பாலப் பணி

Update: 2025-06-08 19:14 GMT

ஆற்காட்டில் சென்னை-பெங்களூரு புறவழிச்சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதியில் ஒருசில நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சண்முகம், சமூக ஆர்வலர், ஆற்காடு.

மேலும் செய்திகள்

சாலை பழுது