மன்னார்குடி மேலவாசல் குமரபுரம் லட்சுமி நகரில் உள்ள சாலை கற்கள் கொட்டப்பட்டு, கரடு, முரடாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் சென்றால் டயர் பஞ்சராகிவிடுகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள், வயதானவர்கள், மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து சேதமடைந்த சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுகம்கள், மன்னார்குடி.