குடிமங்கலம் அருகே கொங்கல்நகரத்திலிருந்து லிங்கம்மாவூர் வழியாக பொட்டயம்பாளையம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இ்ந்த சாலையில் அடிக்கடி வாகனங்கள் சென்று வருவதால் பரபரப்பாக காணப்படும். தற்போது சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுகிறது. சாலையின் வழியாக பஸ் செல்லும் போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் அவர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. எனவே சாலை ஓரங்களில் இருபுறமும் வளர்ந்துள் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கதிரவன், கொங்கல்நகரம்.