ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

Update: 2026-08-16 13:33 GMT

தர்மபுரி மாவட்டம் அத்திமுட்லு ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் கிராமத்தில் இருந்து மாரண்டஅள்ளி செல்லும் சாலை சுமார் 3 கிலோமீட்டர் வரை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டு, குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை செல்ல வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் என அனைவரும் சிரமம் அடைகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்