குண்டும், குழியுமான சாலை

Update: 2026-08-16 13:40 GMT

திருவள்ளூர் மாவட்டம், களக்காட்டூர் ஊராட்சியில் தக்கோலம் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து ராமாபுரம் வரையில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைப்பதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், அதன்பிறகு சாலை சீரமைப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, இன்றுவரை முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்